வியாழன், 15 டிசம்பர், 2022

நெல்லை அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர் தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க டிஜிபி சைலேந்திரா பாபு கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் தலைமையிலான, வி.கே.புரம் காவல் ஆய்வாளர் பெருமாள் மற்றும் அம்பாசமுத்திரம் தனிப்படை போலீசார், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  இந்த நிலையில், நேற்று வாகன தணிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, மினி லாரியின் அடியில் ரகசிய கபோர்டு அமைத்து, அதில் சுமார் 100 கிலோ எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இராமானுஜம் புதூரை சேர்ந்த தளவாய் மாடன்(24) என்பவரை போலீசார் கைது செய்து, மினி லாரி மற்றும கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, தளவாய் மாடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஆதிச்சநல்லூரை சேர்ந்த பிரவின், புதுக்குடியை சேர்ந்த அருள்பாண்டி உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகினறனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: