செவ்வாய், 20 டிசம்பர், 2022

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த 20 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஈரோடு ரெயில்வே போலீசார் மீட்டு விசாரணை ...!

வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுவரன், ரெயில்வே போலீசார் அருள்செல்வம், ராஜவேல், சரவணகுமார் ஆகியோர் தன்பாத் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை செய்தனர். அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் (குட்கா) இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டபோது இது தங்களுடையது இல்லை என பயணிகள் தெரிவித்தனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கடத்தல் கும்பல் குட்காவை அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. பின்னர் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்ததும் போலீசார் கைப்பற்றிய 20 கிலோ போதை பொருட்களை மீட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து போதைப் பொருள் கடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: