ஞாயிறு, 18 டிசம்பர், 2022

ஓட்டப்பந்தய போட்டியில் மாவட்ட ஆட்சியர் தனது மனைவி குழந்தைகளுடன் கலந்து கொண்டு ஓடி உற்சாகம்..!

ஓட்டப்பந்தய போட்டியில் மாவட்ட ஆட்சியர் தனது மனைவி குழந்தைகளுடன் கலந்து கொண்டு ஓடி உற்சாகம்..! ராணிப்பேட்டை ஜாலி பாய்ஸ் ரன்னஸ் கிளப் சார்பில் நான்காவது ஆண்டு மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியானது பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. மேலும் இந்த மாரத்தான் போட்டியில் இரண்டாயித்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்று இருந்தனர், இதில் 5 கிலோ மீட்டரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவு என்று நிர்ணயிக்கப்பட்டு இளைஞர்கள், குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என அனைவருக்குமான மாரத்தான் ஓட்டபந்தயமானது நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டபந்தய நிகழ்ச்சியை தமிழக கைத்தறி மற்றும் தூணிநுல் துறை அமைச்சர் ஆர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாவட்டம் ஆட்சி தலைவர் பாஸ்கர் பாண்டியன் இந்த ஓட்டப்பந்தய போட்டியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்று ஓடினார். இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றவர் முக்கிய வீதிகளில் வழியாக ஓடிவந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: