புதன், 25 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாத 74 வது குடியரசு தினவிழா..!

74 வது குடியரசு தினம்....ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை. 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று கொண்டார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கிய ஆட்சியர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 485 பேருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது, இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: