ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஆங்கில புத்தாண்யொட்டி விடியற்காலை முதலே ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம்..!

ஆங்கில புத்தாண்டு 2023 பிறந்ததை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இந்நிலையில் மணக்குள விநாயகரை வழிபட ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விடிய காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கேற்ப கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு மக்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதே போல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது, மேலும் ஏராளமான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்களுக்கு வருவார்கள் எனபதால் மணக்குள விநாயகர் கோயில் மட்டுமின்றி பல்வேறு கோயில்களில் போலீசார் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: