ஞாயிறு, 29 ஜனவரி, 2023

தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் விருப்பங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அ. தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் த.மா.கா. பிரமுகர் இல்ல திருமணத்திற்கு மாநில தலைவரும் எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வருகை தந்து கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வாசன் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிடுவதை ஏற்றுக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கும், த.மா.கா.வுக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். தி.மு.க. ஆட்சியில் பொது மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்களுக்கு நல்ல ஈர்ப்பு இருப்பதாக எதுவும் தெரியவில்லை. எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. மாபெரும் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சி யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தட்டும்.‌அது பற்றி நாங்கள் எதுவும் கூற மாட்டோம். நாங்கள் எங்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்த ஜி.கே.வாசனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், த.மா.கா. மாநிலச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ. தி.மு.க. பொருளாளர் கே.பி.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: