சனி, 28 ஜனவரி, 2023

அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள பகுதி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்..

 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட அசோகபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கிழக்கு தொகுதி தேர்தல் பணி என்பது களம் கண்ட பலரும் சிறப்புடன் பணி ஆற்றுகிறோம்.அதிமுகவை பொறுத்தவரை கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அயராது பணியாற்றி வருகிறோம்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு தேர்தல் வெற்றி இருக்கப் போகிறது.. எங்களை பொறுத்தவரை எதிர்க்கட்சியினர் மாடியில் இருந்து மக்களை பார்க்கின்றனர்... வெற்றி என்பதை மட்டும் லட்சியமாக வைத்து பணியாற்றி வருகிறோம். நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்..பிரச்சாரம் துவங்கி நடைபெறுகிறது . தொகுதி மக்களை பொறுத்தவரையில் மாற்றத்தை விரும்புகின்றனர் . வீடாக வீடாக சென்று மாற்றம் தேவை என்பது மக்கள் சொல்லி வரும் சூழலில் மக்களின் மனநிலை வெளிப்படையாக உள்ளது என்றார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சி மன்ற குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும் என்றும் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: