ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மேனகா நவநீதன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல் தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். பா.ம.க, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட போவதில்லை என்று அறிவித்து விட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை. அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு மகளிர் பாசறை இணைச் செயலாளர் மேனகா நவநீதன், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம் இவற்றிற்கு யார் காரணம். வாக்குக்கு கையேந்தும் நிலைமையில்தான் மக்களை வைத்துள்ளார்கள். தலைவனை மக்கள் தேட வேண்டும். வழியில்லை என்று சொல்லக்கூடாது. வழியை உருவாக்க வேண்டும் என்றார்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: