வியாழன், 26 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அறிவிக்க உள்ளார்..!?

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் தேர்தல் பணி குழு கூட்டம் நடைபெற்றது. இந்தத் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன, கே.சி கருப்பண்ணன், கே.வி ராமலிங்கம், தங்கமணி, விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ் தென்னரசு, சிவசுப்பிரமணியம், இ.எம் ராஜா உள்ளிட்ட அதிமுக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து, காலை 10 : 30 மணிக்கு துவங்கிய தேர்தல் பணிக்குழு கூட்டமானது மாலை 6 : 30 அளவில் நிறைவடைந்தது, எட்டு மணி நேரம் இக்கூட்டமானது நடைபெற்றது. இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். நாளை காலை 10 மணிக்கு மேல், மீண்டும் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது . இதன் தொடர்ச்சியாக நாளை முழுமையாக இந்த தேர்தல் பணிக்குழு கூட்டமும், ஆட்சி மன்ற குழுவில் முடிவெடுக்கப்பட்டு நாளையே, நாளை மறுநாளோ வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படலாம் என்ற தகவல்களை அதிமுக வட்டார தெரிவிக்கின்றன.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: