ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுகிறது அதற்காக கடந்த 31ஆம் தேதி முதல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்துனர் சிவகுமாரிடம் 7ந் தேதி வரை அங்கிகாரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்ட 121 மனுக்கள் மீதான பரிசீலனை கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தினர் சிவக்குமார் மனுதாரர்களிடம் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார்.
இதனையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தைச் சுற்றி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவின் பேரில், மாநகர துணை கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
0 coment rios: