திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 74.79 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதில், ஆண்கள் - 82,138, பெண்கள் - 88,037, மூன்றாம் பாலினத்தவர்கள் - 17 பேர் என மொத்தம் 1,70,192 பேர் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ராஜாஜிபுரம் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வாக்களித்தனர் என்றார்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு "சீல்" வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்...பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்வர் மு.க ஸ்டாலின்..! https://www.shabanewstamil.com/2023/02/1000_25.html#.Y_zfB0sNaF0.whatsapp

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: