புதன், 8 பிப்ரவரி, 2023

தமிழக முதல்வர் ஒன்றை தொட மாட்டார் - தொட்டால் அதை இறுதி வரை விட மாட்டார் அமைச்சர் சேகர்பாபு பேட்டி ..!

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், 


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை. ஈரோடு மாநகராட்சியில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்றன. இதில் 32 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கவுன்சிலர்களாக உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் ஆனாலும் சரி, அதற்கு முந்தைய லோக்சபா தேர்தல் ஆனாலும் சரி அதிமுகவுடன் போட்டியிட்டு தான் திமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றுள்ளது. 

தற்போது பல்வேறு புதிய கட்சிகள் திமுகவில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சியினர் நடுநிலை வகிக்கின்றனர். பல கட்சிகள் களத்துக்கே வரவில்லை. இந்த நிலையில் திமுக என்பது தன்னையும், தன்னுடைய தோழமையையும் நம்பி நிற்கின்ற இயக்கம். எனவே இதற்கு பொய்க்கால் தேவை இல்லை. வலுவான  தலைமையில் அமைந்திருக்கின்ற மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்த பட்சம் 80 சதவீத வாக்குகளை அள்ளுவதற்குரிய அறிகுறிகள் தேர்தல் களத்திலேயே தெரிகிறது.  

நீட் தேர்வை அதிமுகவினர் இருந்தபோது தமிழகத்தில் நுழைய விட்டனர். தமிழக முதல்வரை பொறுத்த வரையில் தொடர்ந்து அதை மத்திய அரசிடமும், சட்டத்தின் வாயிலாக சட்ட போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஒன்றை தொட மாட்டார். தொட்டால் அதை இறுதி வரை விட மாட்டார் என்றார்.

அமைச்சர் சேகர்பாபு. ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் பகுதியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வீடு வீடாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அவர்களுடன் மாமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி, செந்தில்குமார், மகேஸ்வரன், முன்னாள் மேயர் குமார் முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: