செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது ..! ஜக்கம்மா சொல்றா ..! ஜக்கம்மா சொல்றா ..!

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஆதரித்து வித்தியாசமான முறையில் குடுகுடுப்புகாரன் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார்

 

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியும், தேமுதிக, நாம் தமிழர், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் உள்ளனர்,

பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது, இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து சூலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமையில் வித்தியாசமான முறையில் சேலம் கோவிந்தன் தலைமை கழக பேச்சாளர் வித்தியாசமான முறையில் குடுகுடுப்பு வேடமணிந்து அதிகாலை 4 மணி முதல் கைச்சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இதேபோல ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: