வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தீவிர வாக்கு சேகரிப்பு..!


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் கே எஸ் தென்னரசு ஆதரவு கேட்டு ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், கேபி முனுசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலால், ஈரோடு மாநகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது, 

அதன்படி, ஈரோடு கிழக்குச் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுக்கு ஆதரவாக, ஈரோடு கருங்கல்பாளையம் 26வது வார்டுக்குட்பட்ட வண்டியூரான் கோவில் வீதி, எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், குயிலாந்தோப்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண் மொழி தேவன் தலைமையில், சாதனைகளை எடுத்து கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: