மகளிர் தினத்தையொட்டி, ஈரோடு மூலபட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதீபம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகிளா காங்கிரஸ் மாகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயா, கிருஷ்ணவேணி உள்ளிட்ட மயிலா காங்கிரஸ் அணி சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர், இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேக் வெட்டி கொண்டாடினார், இதனையடுத்து மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதீபத்திற்கு கேக்கை ஊட்டி மகிழ்வித்தார்.
இதனைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் எம்.ஞானதீபம் தலைமையில் தேசிய தொழிலாளர் காங்கிரஸ் ஈரோடு மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, அக்ரஹாரம் ஜெயா, முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருசெல்வம் கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத்தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், துணைத்தலைவர்களான கே எஸ் செல்வம், எம் ஆர் அரவிந்த்தாஸ், பாபு என்கிற வெங்கடாஜலம், பாஸ்கர்ராஜ், பொது செயலாளர்களான இரா.கனகராஜன், பி ஆறுமுகம் மண்டலத் தலைவர்களான அல்டிமேட் தினேஷ்,ஆர். விஜயபாஸ்கர்,எச்.எம்.ஜாபர்சாதிக், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட சேவாதள தலைவர் எஸ் முகமது யூசுப், ஈரோடு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி. மாரிமுத்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், துணைத் தலைவர் கே என் பாஷா, வார்டு தலைவர்களான சம்பத் நகர் ஜி வேணுகோபால், சூரம்பட்டி விஜயகுமார்,சபீர் அகமது, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜயகண்ணா, ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குப்பண்ணா சந்துரு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோசமிட்டனர் நிறைவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி நன்றி கூறினார்.
0 coment rios: