செவ்வாய், 24 அக்டோபர், 2023

ஈரோட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை முதல் 2 நாள் நடைபயணம்

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் அண்ணாமலை நடைபயணம் செய்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். 

அதன்படி, புதன்கிழமை (நாளை) மதியம் 3 மணிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி அரசு மருத்துவமனையில் இருந்து நடைபயணத்தை அவர் தொடங்குகிறார். சிவகிரி குமரன் சிலை பகுதியில் மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். இதைத்தொடர்ந்து பெருந்துறை - குன்னத்தூர் ரோட்டில் மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபயணத்தை அண்ணா தொடங்குகிறார். தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிகளுக்கான சுற்றுப்பயணம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மேற்கொள்கிறார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாலை 5 மணிக்கு அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க. கட்சியினர் தயாராகி வருகின்றனர். 


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: