அதன்படி, புதன்கிழமை (நாளை) மதியம் 3 மணிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி அரசு மருத்துவமனையில் இருந்து நடைபயணத்தை அவர் தொடங்குகிறார். சிவகிரி குமரன் சிலை பகுதியில் மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். இதைத்தொடர்ந்து பெருந்துறை - குன்னத்தூர் ரோட்டில் மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபயணத்தை அண்ணா தொடங்குகிறார். தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிகளுக்கான சுற்றுப்பயணம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மேற்கொள்கிறார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாலை 5 மணிக்கு அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க. கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
0 coment rios: