ஈரோடு மாவட்ட ஜித்தோகுகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கராத்தே கலர் பட்டை தேர்வு ஈரோட்டில் இன்று நடந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு ஈரோடு மாவட்ட கராத்தே சங்க செயலாளர் சக்திவேல் கலந்துகொண்டு கலர் பட்டைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் ஈரோடு மாவட்ட ஜித்தோகுகாய் செயலாளர் மணி, பயிற்சியாளர்கள் மாணிக்கவாசகம், பூர்ணிமா தேவி, காசி விசாலாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 coment rios: