சனி, 18 நவம்பர், 2023

ஈரோட்டில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கல்

ஈரோடு மாவட்டம் திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளியில், கூட்டுறவுத்துறையின் சார்பில், "அரசு தனியார் கூட்டுறவு பங்களிப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது. இவ்விழாவில், 1,894 பயனாளிகளுக்கு ரூ.25.81 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் ஆகியோர் வழங்கினர். 

மேலும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களை சிறப்பிக்கும் வகையில் 59 சங்கங்களுக்கு சிறந்த சங்கங்களுக்கான கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், சிறப்பாக செயல்பட்ட சிறந்த இணைப்பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவின்போது, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், கூடுதல் பதிவாளர் செயல் ஆட்சியர் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செந்தமிழ்செல்வி, ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் ரோணுகா, துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிரகாஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) வெங்கடேஷன், துணைப்பதிவாளர் (பால்வளம்) சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், முத்து சிதம்பரம், ராமநாதன், மாதேஸ், கணேசன், காந்திமணி, ஜெகநாதன், உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் கூட்டுறவு) தெய்வமணி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் பாலாஜி, கிருத்திகா உட்பட கூட்டுறவு சங்கங்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: