வெள்ளி, 17 நவம்பர், 2023

ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டும் மற்றும் கந்தசஷ்டி திருவிழா, சுபமுகூர்த்த நாள் வருவதாலும் ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: