வெள்ளி, 24 நவம்பர், 2023

ஈரோடு ஆட்சியரக வளாகத்தில் விரைவில் சிறுதானிய சிற்றுண்டி; ஆட்சியர் தகவல்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சிறுதானிய உணவு திருவிழா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சிறுதானிய பயிர்களை விவசாயிகள் அதிகளவில் பயரிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், மகளிர் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் சார்பில் சிறுதானிய சிற்றுண்டிகள் அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் துவங்கப்படவுள்ளதாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை உழவர் நலத்துறை) வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார், துணை இயக்குநர் (வேளாண்மை உழவர் நலத்துறை) முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: