வெள்ளி, 24 நவம்பர், 2023

ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீது தொடரும் படுகொலைகளை கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திம் பேருந்து நிறுத்தம் அருகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் ஏ செல்வராஜ் தலைமையில், தென் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக ஏராளமான படுகொலை நடைபெற்று வருகிறது. இந்த படுகொலை சம்பவங்களால், தென் மாவட்ட பொதுமக்கள் அதிகளவு பாதித்துள்ளனர், இதனால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை கவனிக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, அரசுக்கு எதிரான முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மயில் துரையன் முன்னிலையில் மாவட்ட மகளிர் தலைவி காஞ்சனா மாவட்ட மகளிர் அணி சத்யா மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஆர் கேஷ் குமார். மாவட்ட பொருளாளர் ராமு. மாவட்ட இணை செயலாளர் செந்தில் மாநகர இளைஞரணி செயலாளர் நல்லசிவம்  மாநகர மாவட்ட செயலாளர் துரைசாமி முஸ்தபா பழனிச்சாமி மகளிர் அணி செயலாளர் தங்கமயில் கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல் பாண்டியன் அந்தியூர் ஒன்றிய தலைவர் கார்த்தி சென்னிமலை ஒன்றிய தலைவர் அப்பா ரங்கசாமி மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்துசாமி பவானி ஒன்றிய செயலாளர் துரைசாமி பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: