செவ்வாய், 21 நவம்பர், 2023

ஈரோட்டில் ‘நடப்போம்; நலம் பெறுவோம்’ திட்டப்பகுதியில் வாக்கிங் மேற்கொண்ட அமைச்சர்

ஈரோடு கனி ராவுத்தர் குளம் பகுதியில், ‘நடப்போம்; நலம் பெறுவோம்’ திட்டப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் 
தமிழகத்தில், 38 மாவட்டங்களிலும் ‘நடப்போம்; நலம் பெறுவோம்’ திட்டத்தில், 8 கி.மீ., துாரத்துக்கான நடைபாதை உருவாக்கப்பட்டு கடந்த, 4ல் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியால் துவக்கப்பட்டது. அவ்வாறான பாதையில், அந்தந்த பகுதி மக்கள் நடைபயிற்சி செல்வதில் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது.
ஈரோடு மாவட்ட ஆய்வுக்கு வந்த நானும், இம்மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவும் இந்நடைபாதையில் பயிற்சி மேற்கொண்டோம்.
இப்பாதை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை உட்பட பல அமைப்பு சார்பில் மரங்கள் நட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கைகள் அமைத்துள்ளனர். முதியவர்கள் ஓய்வு பெறும் இடமும், இளைஞர்களுக்கான செல்பி பாயிண்டும் அமைத்துள்ளனர். நடந்தால் என்ன நன்மை என்பது குறித்து விழிப்புணர்வு பதாகை வைத்துள்ளனர்.
இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: