திங்கள், 20 நவம்பர், 2023

ஈரோட்டில் தோழரின் சங்கர் ஐயா படத்திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் ஈரோடு மூலப்பாளையம் என் ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தோழரே, சங்கரய்யா படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்தினார். மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி, (திமுக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துளசிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சாதிக், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜாபர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சித்திக், திராவிடர் கழகத்தின் சார்பில் சண்முகம் மற்றும் பொல்லான் பேரவை வடிவேல் ராமன் ஆகியோர் இரங்கல் வரை நிகழ்த்தினர். திமுக மாநகரச் செயலாளர் மு.சுப்ரமணியன், சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: