செவ்வாய், 26 டிசம்பர், 2023

ஈரோடு பெரியசடையம்பாளையத்தில் ரூ.59.60 கோடியில் சாலை அமைக்கும் பணி

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசடையம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், புதிய சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மது விலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.59.60 கோடி மதிப்பீட்டில் ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் (ஈரோடு தாராபுரம் சாலை ஆணைக்கல்பாளையம் பிரிவு முதல் ஈரோடு - பெருந்துறை காங்கேயம் சாலை திண்டல் சின்னமேடு வரை) புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த சாலையானது, ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை கி.மீ 7/2-14/615 வரை இருவழி தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் மற்றும் குறுக்கு வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல் மற்றும் மையத் தடுப்பு அரண் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பழனிசாமி, குறிஞ்சி தண்டபாணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மாதேஸ்வரன், உதவி இயக்குநர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: