செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஈரோடு ஒன்றியத்தில் ரூ.85.95 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்; ஆட்சியர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.85 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் குழந்தைகளின் வருகை விவரங்கள், குழந்தைகளின் எடை, உயரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளரிடம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தார்.
தொடர்ந்து, எலவமலை ஊராட்சி கரைஎல்லப்பாளையம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18.76 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், மூலப்பாளையம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியினையும், அதேபகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பிச்சாண்டம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.91 லட்சம் மதிப்பீட்டில் வேலாம்பாளையம் குளத்திற்கு அருகில் கான்கிரீட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடம் புனரமைப்பு பணியையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: