முன்னதாக, ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டுவில்லை அடங்கிய ஆட்டோ பயணத்தை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் கிராமிய கலை எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தையும் துவக்கி வைத்தார். இப்பேரணியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் 200 கல்லூரி மாணவ, மாணவியர்கள் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக புறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) பிரேமகுமாரி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள் / மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்) மரு.சோமசுந்தரம், துணை இயக்குநர் (குடும்ப நலம்) (பொ) மரு.செந்தில்குமார்,மாநகர நல அலுவலர் மரு.பிரகாஷ், மாவட்ட திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு) துரைசாமி உட்பட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் என சுமார் 400 நபர்கள் கலந்து கொண்டனர்
0 coment rios: