சனி, 9 டிசம்பர், 2023

அந்தியூர் அருகே பப்பாளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

கர்நாடகா மாநிலம் ராமாபுரத்தில் இருந்து பப்பாளி பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் நோக்கி பர்கூர் மலைப்பகுதி வழியாக சரக்கு வாகனம் (ஈச்சர்) ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகனத்தை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராமு என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், சரக்கு வாகனம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊசிமலை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வளைவில் வேகமாக திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டுநர் ராமு லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், வாகனத்தில் ஏற்றப்பட்டு இருந்த பப்பாளி பழங்கள் சேதமாகின. இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: