வெள்ளி, 1 டிசம்பர், 2023

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு எஸ்.பி. எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வணிகர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவர் களை சீரழித்து வருகிறது. எனவே, இந்த மாதிரியான தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்படும். மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்ந்து, அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இங்கு விற்பனைக்கு இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை எஸ்பி ஜவகர் வழங்கினார். இக்கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செல்வம் ஆகியோர் நடத்தினர். 

இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ், மது விலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி பவித்ரா, பாலமுருகன், ஈரோடு நகர உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செல்வன், அருண்குமார் மற்றும்
வணிகர் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: