ஞாயிறு, 24 டிசம்பர், 2023

பெருந்துறையில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில், பெருந்துறை பங்களா வீதியில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்திற்கு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் பங்களா வீதியிலிருந்து மௌன அஞ்சலி ஊர்வலமாக புறப்பட்டு, ஈரோடு மெயின் ரோடு வழியாக குன்னத்தூர் நால்ரோட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் அங்கு 5 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், விஜயன் என்கிற ராமசாமி, அருள் ஜோதி செல்வராஜ், பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ பொன்னுதுரை உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: