புதன், 13 டிசம்பர், 2023

கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் : ஆட்சியரிடம் மனு

கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மாநகரத்தில் பரபரப்பு..!

ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்ய கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.

ஈரோடு சங்கு நகர் பிரிவிலிருந்து, துவங்கிய நடைபயண நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.


நடைபயணம் : ஈரோடு சங்கு நகர் பிரிவிலிருந்து துவங்கி பெருந்துறை சாலை, வழியாக சுமார் 3 கிமீ தூரம் பழையபாளையம், குமலன் குட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை வந்தடைந்தது. அங்கு, கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

இதில், கீழ்பவானி பாசன விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி, கீழ்பவானி பாசன சபை பிரிவின் தலைவர் செங்கோட்டையன், தமிழ்நாடு சிறு மற்று குறு விவசாயிகள் சங்கம் தலைவர் சுதந்திர ராசு, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன், இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, கீழ்பவானி கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: