தென்னிந்திய வேர்ல்டு புனோகோசி ஷோட்டோகான் கராத்தே அமைப்பின் சார்பில், தேசிய அளவிளான கராத்தே போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. போட்டிக்கு, வேர்ல்ட் புனக்கோசி ஷோட்டோகான் கராத்தே அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் சையத் ஃபவாதுல்லாஹ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, அமைப்பின் நிறுவனர் ஹஸன் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டார்.
போட்டியில், மும்பை, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு எஸ்எம்ஏ அகாடமி மற்றும் தமிழ்நாடு வேர்ல்டு புனோகோசி ஷோட்டோகான் கராத்தே மாணவர்கள் முஹம்மது யஹ்யா தலைமையில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
0 coment rios: