வெள்ளி, 26 ஜனவரி, 2024

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி பிப்.5ல் தொடக்கம்

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, "பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி தொடர்பான இலவச பயிற்சி" முகாம் வரும் 05-02-2024 முதல் 09-03-2024 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமிற்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

"வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் " அல்லது " நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள்’’ மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 8778323213 , 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், இப்பயிற்சியானது ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு , ஈரோடு - 638002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: