வியாழன், 11 ஜனவரி, 2024

சிவகிரியில் கொடிகாத்த குமரனின் 92வது நினைவு நாள் அனுசரிப்பு

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த 1932ம் ஆண்டு திருப்பூர் சட்டமறுப்புப் போராட்டம், தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆங்கிலேயே காவல்துறையினர் நடத்திய தடியடியில் கொடியைக் காத்து 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி திருப்பூர் குமரன் வீரமரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் குமரன் சதுக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் இன்னுயிர் நீத்த நாளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில், மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலையில், மாவட்டத் தலைவர் நந்தகோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வச்சரவேலு, சீனிவாசன், வைரம், முருகானந்தபதி, பிரதாப், விக்ரம், தங்கமாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: