வியாழன், 11 ஜனவரி, 2024

ஈரோட்டில் நாய்கள் தொல்லை தாங்க முடியல: கட்டுப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களின் அதிகரிப்பு, தொல்லைகளை குறைக்க மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆனாலும், தெரு நாய்களின் தொல்லை மட்டும் குறைந்தபாடில்லை என பொதுமக்களும், மாமன்ற உறுப்பினா்களும் தெரிவிக்கின்றனா்.
குறிப்பாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில் 
தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: