செவ்வாய், 2 ஜனவரி, 2024

குழந்தைகள் இல்லங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதூர். அக்ரஹாரம், மரப்பலாம் ஆகிய பகுதிகளில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், சமையலறைகள், குழந்தைகள் தங்கியுள்ள அறைகள், கழிப்பறைகள், சுற்றுபுறத்தூய்மை போன்றவைகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: