வெள்ளி, 26 ஜனவரி, 2024

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து: ஆட்சியர் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், குடியரசு தினத்தையொட்டி சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பங்கேற்று, பொதுமக்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேசன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், உறுப்பினர் கீதா கதிர்வேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் கயல்விழி உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட உயா் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: