வியாழன், 18 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: ஈரோட்டில் தனியார் கல்லூரி ஊழியரின் வீட்டில் 14 பவுன் நகை துணிகர கொள்ளை

ஈரோடு வேப்பம்பாளையம் நஞ்சனாபுரம் சாலையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 45). இவரது மனைவி சுகந்தி. பிரகாஷ் அங்குள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, பிரகாஷ் தனது சொந்த ஊரான பெருந் துறை அடுத்துள்ள திங்களூருக்கு குடும்பத்துடன் கடந்த 14ம் தேதி சென்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது மேல்மாடியில் உள்ள வீட்டின் கதவு மற்றும் பெட்ரூம் கதவு ஆகியவற்றின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆரம் 7 பவுன் செயின் 3 பவுன், தங்க நாணயம் 4 பவுன் உள்பட மொத்தம் 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், பாதுகாப்பு கருதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி டிவிடி பிளேயரையும் கொள்ளையர்கள் கழற்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் 4 அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: