இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது மேல்மாடியில் உள்ள வீட்டின் கதவு மற்றும் பெட்ரூம் கதவு ஆகியவற்றின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆரம் 7 பவுன் செயின் 3 பவுன், தங்க நாணயம் 4 பவுன் உள்பட மொத்தம் 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், பாதுகாப்பு கருதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி டிவிடி பிளேயரையும் கொள்ளையர்கள் கழற்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் 4 அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: