ஞாயிறு, 7 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News & Live Updates: ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் வெளியீடு

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழுக் கரும்பு 1 மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000/- உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு பகுதி வாரியாக  9ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் 10ம் தேதி முதல் 14ம் தேதி  வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இப்பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 18004255901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: