இதன் ஒரு பகுதியாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாளையொட்டி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகர் முன்னிலையில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருங்கல்பாளையம் பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வம் சார்பில் பெண்களுக்கு சேலை வழங்கி சர்க்கரை பொங்கலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ஆயில்துரை, மொடக்குறிச்சி தொகுதி செயலாளர் செந்தில்குமார், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராமசாமி, பெரிய அக்ரஹாரம் பகுதி செயலாளர் முகமது ராசிக், பெரியசேமூர் பகுதி செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் செளகத் அலி, மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: