வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

அந்தியூர் அருகே மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் .கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா (வயது 20). கர்ப்பிணியான இவருக்கு வெள்ளிக்கிழமை (இன்று) மதியம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக, தேவர்மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிதாவை ஏற்றிக்கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, வரட்டுப்பள்ளம் அணை அருகே சென்ற போது, கவிதாவுக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது கவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு கவிதா உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: