உடனடியாக, தேவர்மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிதாவை ஏற்றிக்கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, வரட்டுப்பள்ளம் அணை அருகே சென்ற போது, கவிதாவுக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது கவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர், சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு கவிதா உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
0 coment rios: