மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவினை அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இதையொட்டி, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி உறுப்பினர், கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைத் செயலாளர்கள் வீரக்குமார், ஆற்றல் அசோக்குமார், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் இராமசாமி, பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, சென்னிமலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பெஸ்ட். சி.எஸ். சிவக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, உள்பட கலந்து கொண்டனர்.
இதேபோல், மாநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளையும் அதிமுகவினர் வழங்கினர்.
0 coment rios: