புதன், 14 பிப்ரவரி, 2024

ஈரோட்டில் போலீசாரை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் போராட்டம்

ஈரோடு சூரம்பட்டி மேற்கு அம்பேத்கர் வீதியில் 65 ஆண்டுகள் பழையான மகாளியம்மன் கோவில் பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இக்கோவிலானது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. கோவில் இடிக்கப்பட்டது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி தெற்கு காவல் நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அப்போது கோவிலை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் இரண்டு மாதம் கோவிலை இடித்தவர்கள் மீது இதுவரை போலீசார் கைது செய்யவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசரை கண்டித்து ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: