அப்போது, சாணிமடுவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து முசுக்கோந்தியை (குரங்கு) சுட்டு கொன்று அதன் கறியை எடுத்துக்கொண்டு வந்த காக்கயனூர் கிராமத்தை சேர்ந்த மாதன் என்கிற துறையன் (வயது 45) என்பவரை கையும் களவுமாக கைது செய்த போலீசார் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் மீது ஏற்கனவே டி.என்.பாளையம் வனச்சரகத்தில் யானை தந்தம் வைத்திருந்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாதன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 coment rios: