ஈரோடு மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில்,சாலையோரங்களில் உள்ள தர்பூசணி, இளநீர் கடைகளுக்கும், குளிர்பான கடைகளுக்கும் படையெடுக்க துவக்கி உள்ளனர். இந்நிலையில், முலாம்பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது. வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வாங்கி வந்து சாலையோரங்களில் பழங்களைக் குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் கோடைக்காலம் தொடங்கும் முன்பே இந்த முலாம்பழங்களை வாங்கி இருப்பு வைத்து தற்போது விற்பனையை விறுவிறுப்பாக நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள், கடைக்காரர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். முலாம்பழம் ஜூஸ் விலை குறைவாக இருப்பதால், மக்களும் அதிகம் வாங்கி பருகுகின்றனர்.
0 coment rios: