அந்த வகையில, இன்று ஈரோடு காளைமாடு சிலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் செலவினப் பார்வையாளர் பாஸ்கர், தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளரின் கார்கள் வந்து கொண்டிருந்தது.
இரண்டு கார்களையும் சோதனை செய்த செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், இரண்டு வாகனங்களுக்கு அரசியல் கட்சி கொடி கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஆற்றல் அசோக்குமாரின் உதவியாளரிடம் கேட்டனர். அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறினார். இருந்தபோதிலும் உரிய அனுமதியை பெற்றதற்கான சான்றிதழை அலுவலகத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அவ்வாறு அனுமதி பெறவில்லை எனில் உடனடியாக கொடியை அகற்றிவிட வேண்டும் எனவும் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
0 coment rios: