திங்கள், 18 மார்ச், 2024

அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கி தர கோரிக்கை

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது.
ஈரோட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின், சேலத்தில் நடந்த அம்பேத்கர் மக்கள் இயக்க உயர்நிலை குழு கூட்டத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு ஒரு சீட் ஒதுக்கி தர அதிமுகவிற்கு கோரிக்கை வைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முன்னணி தேர்தல் பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து, அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு ஒரு சீட் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனை அடுத்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி இல்லத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை நேரில் சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், சேலம், நீலகிரி, சிதம்பரம், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு ஜெயராமன், வழிகாட்டுதல் குழு தலைவர் ஆசிர்வாதம் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.




শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: