புதன், 6 மார்ச், 2024

தேர்தல் நடத்தை விதி என்ற பெயரில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது.

 
சேலம்.

S.K. சுரேஷ்பாபு.

தேர்தல் சோதனை என்ற பெயரில் வெள்ளி கொலுசுக்கான மூலப்பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது.



நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் பார்வையாளர்கள் சோதனை என்ற பெயரில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கான மூலப்பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று, சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவியிடம் கோரிக்கை மனு.


மனு குறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் இந்த வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெள்ளி கொலுசு உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி சோதனை என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தினர் ஆங்காங்கே தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர். 

குறிப்பாக தேர்தல் பார்வையாளர்கள் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் இடங்களுக்கே சென்று சோதனை என்ற பெயரில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் அந்தஸ்து பெற்று தர வேண்டும் என்றும் மனுவின் வாயிலாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அவர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் தெரிவித்தார்.

மனு வழங்கும் இந்த நிகழ்வின் போது சங்க நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: