புதன், 13 மார்ச், 2024

கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் சிறப்பு மாநாடு.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் 19 ஆவது ஆண்டு விழா மற்றும் சிறப்பு மாநாடு நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 19ம் ஆண்டு விழா மற்றும் மாநாட்டிற்கு அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு தலைமை தாங்கினார். 
தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் மாநாடு கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கோவில் பூசாரிகள் ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும் மற்றும் ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சங்கர் சுந்தரம் சிவகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள்  கோவில் பூசாரிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: