பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, துணை செயலாளர்கள் சூர்யா ஆ.செந்தில்குமார், சின்னையன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல்
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி(புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
0 coment rios: