வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், ஈரோடு தொகுதி முழுவதும் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மணி நிலவரப்படி 13.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 25.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் அதாவது இன்று மதியம் 1 நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 42.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: